இரண்டாம்-தலைமுறையான மஹிந்திரா தார் ஜூன் 2020-ல் அறிமுகம் செய்யப்படும்

published on மார்ச் 14, 2020 02:39 pm by dinesh for மஹிந்திரா தார்

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு இயந்திர விருப்பங்களுடன் கிடைக்கும்

  • ஆட்டோ எக்ஸ்போ 2020- ல் இது காட்சிப்படுத்தப்படவிருந்தது, ஆனால் மஹிந்திரா இதைத் தனி நிகழ்வில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது.

  • இது முந்தைய மாதிரியுடன் ஒப்பிடும் போது முற்றிலும் புதிய தயாரிப்பாக இருக்கும்.

  • இதன் விலை தற்போதைய எஸ்‌யு‌வியைக் காட்டிலும் ரூபாய் 2 லட்சம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் இரண்டாவது தலைமுறையான தாரை பார்க்க நீண்ட காலமாகக் காத்திருந்தால், அந்த காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. மஹிந்திரா இரண்டாவது தலைமுறையான எஸ்‌யு‌வியை 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்வதாக உறுதிப்படுத்தியுள்ளது, ஆகையால் இது ஜூன் 2020 க்குள் விற்பனைக்கு வந்தாக வேண்டும். கார் தயாரிப்பு நிறுவனம் புதிய தார் காரைப் பற்றிய மேற்பட்ட விவரங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்த்திருந்தாலும், சில உளவு காட்சிகள் மூலம் வரவிருக்கும் எஸ்யுவி குறித்த யோசனை எங்களுக்குக் கிடைத்துள்ளது. ஆகவே, நாம் அதைப் பற்றிப் பார்ப்போம்.

டீசல் வகையை மட்டும் வழங்குகிற தற்போதைய தாரைப் போலில்லாது, 2020-ல் அறிமுகமாகும் தார், 2.0-லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இயந்திரம் 190 பிஎஸ் மற்றும் 380 என்எம் யினை உற்பத்தி செய்யும், அதேபோல் 2.0-லிட்டர் டீசல் இயந்திரம் முந்தைய 2.5-லிட்டர் அலகை (105 பிஎஸ்/247 என்எம்) காட்டிலும் அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை, மஹிந்திரா நிலையான 6-வேகக் கைமுறை கொண்ட பற்சக்கரப்பெட்டி மற்றும் 4டபில்யு‌டி ஆற்றல் இயக்கியுடன் சேர்த்து தானியங்கி உட்செலுத்தல் விருப்பத்தையும் தாருக்கு வழங்க வாய்ப்புள்ளது.

2020 தார் சிறப்பான அம்சங்கள் பொருத்தப்பட்டு வருகிறது. முந்தைய உளவு காட்சிகளிலிருந்து நாங்கள் பார்த்தது என்னவென்றால், இது வேகக் கட்டுப்பாடு, தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, பின்புற மற்றும் முன்புறத்தை நோக்கிய இருக்கைகள் மற்றும் மின்சார ஜன்னல்கள் போன்ற அம்சங்களுடன் சேர்த்து தொழிற்சாலைக்கு ஏற்ப பொருத்தப்பட்ட கடினமான மேற்கூரையையும் பெறுகிறது. நான்கு சக்கரங்கள் அனைத்திலும் டிஸ்க் தடைக்கருவிகள், இரட்டை-முன்புற காற்றுப்பைகள், இபிடி கொண்ட ஏபிஎஸ், காரை நிறுத்த உதவும் கேமரா, பின்புறமாக காரை நிறுத்த உதவும் உணர்விகள், முன்புற இருக்கையின் வார்பட்டை நினைவூட்டி மற்றும் அதிவேக எச்சரிக்கை அமைப்பு போன்றவற்றை வழங்குகிறது.

புதிய தார் இதன் முந்திய மாதிரியை விடக் கணிசமான அளவில் நவீனமாக இருக்கும் என்பதால், தற்போதைய மாதிரியை விட ரூபாய் 2 லட்சம் வரை கூடுதல் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூபாய் 9.59 லட்சம் முதல் ரூபாய் 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும் இது தொடர்ந்து ஃபோர்ஸ் குர்காவுக்குப் போட்டியாக இருக்கும், இது கூடிய விரைவில் ஒரு தலைமுறைக்கான  புதுப்பிப்பைப் பெறும். ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் புதிய ஜெனரல் ஃபோர்ஸ் குர்கா காட்சிப்படுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:  புதிய ஃபோர்ஸ்‌ குர்கா எப்படி இருக்கிறது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது 

மேலும் படிக்க:: மஹிந்திர தார் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மஹிந்திரா தார்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience