Tata Nexon குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு: முந்தையது மற்றும் புதியது
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் முன்பு இருந்ததைப் போலவே 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அந்த மதிப்பெண் 2018 ஆண்டில் பெற்றதை விட 2024 -ம் ஆண்டில் சிறப்பானதாக இருக்கிறது. அதற்கான காரணங்கள் இங்கே.
குளோபல் NCAP ஆணையமானது 2014 ஆம் ஆண்டு முதல் #SaferCarsForIndia என்பதை மையமாக வைத்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களை கிராஷ்-டெஸ்ட் செய்யத் தொடங்கியது. அதன் முதல் பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுவது 2018 -ஆண்டாக உள்ளது. அப்போது தான் டாடா நெக்ஸான் பாதுகாப்பு மதிப்பீடுகளில் முழு 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற முதல் இந்திய கார் ஆனது. இப்போது, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனும் இப்போது அதே மதிப்பீட்டை பெற்றுள்ளது. மேலும் இப்போது கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
நெக்ஸான் காரின் கிராஷ் டெஸ்ட் செயல்திறன் அன்றிலிருந்து இன்று வரை எவ்வாறு மாறியுள்ளது என்பதை ஆராய்வதற்கு முன், சோதனை விதிமுறைகளுக்கு உட்பட்டு எஸ்யூவி -யில் எவையெல்லாம் மேம்படுத்தப்பட்டன என்பதை முதலில் பார்க்கலாம்.
டாடா நெக்ஸான்: பழையது மற்றும் புதியது
2017 ஆம் ஆண்டில், டாடா முதலில் நெக்ஸானை அறிமுகப்படுத்தியபோது, ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் டூயல் முன் ஏர்பேக்குகள் மற்றும் EBD உடன் ABS ஆகும். டாடா நெக்ஸான் 2018 ஆம் ஆண்டில் இரண்டு முறை கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது, மேலும் முன்பக்கத்தில் இருப்பவர்களுக்கு சீட்பெல்ட் ரிமைண்டர்களை ஸ்டாண்டர்டாக வழங்கும் ஒரு சிறிய அப்டேட்டுக்கு பிறகு, எஸ்யூவி 5-நட்சத்திர ரேட்டிங்கை பெற்றது (இது முதலில் 4-நட்சத்திர ரேட்டிங்கை பெற்றிருந்தது).
இப்போது எஸ்யூவி -யில் இரண்டு அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் இப்போது ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் ஸ்டாண்டர்டாக வருகிறது. இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் ஆகியவை அடங்கும். அது மட்டுமல்லாமல், டாடா நிறுவனம் சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட்டுடன் எஸ்யூவி -யின் கட்டமைப்பு மற்றும் வலிமையை கொடுக்கும் வகையில் தரத்தை மேம்படுத்தியுள்ளது, இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பானது மேம்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா ? உங்களிடம் உள்ள பழைய காரை ஸ்கிராப் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா ?
குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
குளோபல் NCAP இந்தியா சார்ந்த கார்களின் கிராஷ் சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது, அதன் முதன்மைக் கவனம் செலுத்தும் பகுதிகளாக முன்பக்க ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஒட்டுமொத்த கட்டமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றை மையமாக கொண்டதாக இருந்தது. இது முன்பக்க ஆஃப்செட் கிராஷ் டெஸ்ட்களை மட்டுமே நடத்தியது மற்றும் இரண்டு வேரியன்ட்களில் ஸ்கோர் செய்தது: ஒன்று வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக (17 புள்ளிகளில் இருந்து) மற்றொன்று குழந்தைகளின் பாதுகாப்பிற்காக (49 புள்ளிகளில் இருந்து).
இன்று, குளோபல் NCAP ஆனது முன்பக்க ஆஃப்செட் சோதனையை நடத்துவது மட்டுமல்லாமல், சைடு இம்பாக்ட், சைடு போல் இம்பாக்ட் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு சோதனைகளை அதன் பாதுகாப்பு மதிப்பீடுகளில் உள்ளடக்கியது. மேலும், அதிகபட்ச 5-நட்சத்திர மதிப்பீட்டை அடைய எலக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), 6 ஏர்பேக்ஸ் மற்றும் ISOFIX போன்ற ஸ்டாண்டர்டான சில பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவதையும் அது கட்டாயமாக்கியுள்ளது. ஆகவே இது இப்போது 34 புள்ளிகள் என்ற அளவில் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கான மதிப்பெண்களை பெற்றுள்ளது.
டாடா நெக்ஸான் குளோபல் NCAP மதிப்பெண்கள்: ஒரு விரைவான ஒப்பீடு
அளவீடுகள் |
2018 டாடா நெக்ஸான் (இரண்டாவது ஸ்கோர்) |
2024 டாடா நெக்ஸான் |
பெரியவர்களுக்கான பாதுகாப்பு |
5 நட்சத்திரங்கள் (17 புள்ளிகளில் 16.06) |
5 நட்சத்திரங்கள் (34 புள்ளிகளில் 32.22) |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு |
3 நட்சத்திரங்கள் (49 புள்ளிகளில் 25) |
5 நட்சத்திரங்கள் (49 புள்ளிகளில் 44.52) |
எஸ்யூவி -யின் இரண்டு பதிப்புகளும் முன்பக்க ஆஃப்செட் கிராஷ் சோதனைகளில் பெரியவர்களுக்கான பயணிகளுக்கு 'நல்லது' பாதுகாப்பை வழங்குகின்றன. இரண்டு மாடல்களின் ஃபுட்வெல் பகுதியும் 'நிலையானது' என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாடிஷெல் மேலும் லோட்களை தாங்கும் திறன் கொண்டதாகக் கருதப்பட்டது. 2024 நெக்ஸான் ஆனது புதிய சைடு போல் இம்பாக்ட் சோதனையில் 'விளிம்பு' முதல் 'நல்லது' என்ற அளவிலான பாதுகாப்பை வழங்கியது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு
2018 நெக்ஸான் காரை பொறுத்தவரை, 3 வயதுடைய டம்மிக்கான குழந்தை சீட் முன்பக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டது. மறுபுறம், இது 18 மாத குழந்தை பின்பக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டது. இரண்டு நிலைகளிலும் ISOFIX ஆங்கரேஜ்களை பயன்படுத்தியிருந்தன, அதே நேரத்தில் பிந்தையதில் ஆதரவு காலுக்கு வந்தது. முந்தையது அதிகப்படியான முன்னோக்கி நகர்வதைத் தடுக்க முடிந்தாலும், ஒட்டுமொத்த பயணிகளுக்கான பாதுகாப்பு 'விளிம்பு' மற்றும் 'நல்லது’ என்ற நிலையில் இருந்தது.
2024 நெக்ஸனுக்கு வரும்போது, 3 வயது மற்றும் 18 மாத வயதுடைய குழந்தைகளுக்கான இருக்கைகள் இரண்டும் பின்நோக்கி ஆங்கரேஜ்கள் மற்றும் சப்போர்ட் லெக்கைப் பயன்படுத்தி நிறுவப்பட்டுள்ளன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு போதுமான நிலையில் இருந்தது. இதற்கிடையில், இரண்டுக்கும் CRS ஆனது சைடு போல் இம்பாக்ட் சோதனையிலும் முழுமையான பாதுகாப்பை வழங்கியது, ஒருவேளை பக்கவாட்டு மற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள் இருப்பதால் அது உதவி செய்திருக்கலாம்.
நெக்ஸானில் அடுத்து என்ன எதிர்பார்க்கலாம் ?
டாடா நெக்ஸான் குளோபல் NCAP -லிருந்து 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றிருந்தாலும், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் (AEB), ரியர்-கிராஸ் டிராஃபிக் வார்னிங் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் போன்ற சில முக்கிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகிய அம்சங்களைப் பெறுவதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தலாம்.
மேலும், புதிய நெக்ஸான் விரைவில் பாரத் NCAP -யால் கிராஷ் டெஸ்ட் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும், டாடா டாடா நெக்ஸான் காரையும் சோதனைக்காக அனுப்பலாம். கிராஷ் டெஸ்டிங்கில், 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெறலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
டாடா நெக்ஸானின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க:பாரத் NCAP vs குளோபல் NCAP : ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள்
மேலும் படிக்க: நெக்ஸான் AMT
Write your Comment on Tata நிக்சன்
Rightly quoted: TATA should bring ADAS, AEB, Collision warning sys to Nexon, Altroz. Should also work towards series hybrid electric engines for best fuel efficiency to stay ahead & overcome Maruti