ஃபோர்டு இந்தியா தொடங்கிய ஃபிகோ ஆஸ்பியர் உங்களை இயக்க செய்வது எது? முன் வெளியீட்டு பிரச்சாரம்!

published on மே 27, 2015 05:29 pm by raunak for போர்டு ஆஸ்பியர்

ஒரு அதிர்ஷ்ட வெற்றியாளர் வீட்டிற்கு ஃபிகோ ஆஸ்பியரை ஓட்டி செல்வார்; தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் ஒவ்வொரும் ரூ. 100,000 வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது!

ஜெய்ப்பூர் : ஃபோர்டு இந்தியா ஒரு புதிய முன் வெளியீட்டு பிரச்சாரத்தை தொடங்கியது - தங்கள் எதிர்பார்க்கப்பட்ட புதிய வெளியீடில் "உங்களை இயக்க செய்வது எது?" - சிறிய சேடன் ஃபிகோ ஆஸ்பியர். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஃபர்ஹான் அக்தர் - 'ஒரு பல்துறை நடிகர், பாடகர் மற்றும் சிறந்த இயக்குனர்', ஆஸ்பியர் தூதராக அறிவித்துள்ளது.

ஃபோர்டு இந்தியாவின் ஃபிகோ ஆஸ்பியர் "உங்களை இயக்க செய்வது எது?" பிரச்சாரத்தில் என்ன உள்ளது

"உங்களை இயக்க செய்வது எது?" பிரச்சாரம் மக்களின் இலக்குகள், கனவுகள், மற்றும் ஆசைககளில் தினந்தோறும் 'முன்னேறி செல்'ல (போர்டின் பொன்மொழி) உந்து கோலாக இருப்பது எது என்பதை பகிர்ந்து கொள்ள கேட்கிறது. இந்த பிரச்சாரத்தில் பங்குபெற, உங்கள் கதைகளை ஆன்லைன் www.whatdrivesyou.in என்ற இணைய தளத்தில் பகிர்ந்து கொள்ளவும். இந்த பக்கத்தில் நாடு முழுவதும் இருந்து வரும் கதைகள் பதிவாகும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இந்த ஒரு 10 வார பிரச்சாரம் மற்றும் ஒரு அதிர்ஷ்ட வெற்றியாளர் நாட்டின் முதல் வாடிக்கையாளராக மாறி வீட்டிற்கு ஒரு புத்தம் புதிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியரை ஓட்டடிச் செல்லலாம்.

மேலும், பிரச்சாரத்தில் எட்டு பங்கேற்பாளர்களை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வெகுமதியாக அளிக்கப்படுகிறது. மொத்தம் 56 பங்கேற்பாளர்களுக்கு பல சிறப்பு பரிசுகள் மற்றும் ஆச்சரியங்கள் உள்ளிட்ட வெகுமதிகள், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள்.

"தனிப்பட்ட முறையிலும் சரி, தொழில் முறையிலும் சரி, நாம் அனைவரும் நம் வாழ்வில் பல்வேறு விஷயங்களால் இயக்கப்படுகிறோம் " - ஃபர்ஹான் அக்தர்

ஃபர்ஹான் அக்தர் மேலும் கூறியதாவது: "அவர்கள் ஆசைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல உதவுகிற ஒரு யோசனையே என்னை உடனடியாக இந்த பிரச்சாரத்தில் இணைத்துக் கொள்ள செய்தது. சித்தாந்தங்களிள் ஒரு சினெர்ஜி உள்ள போது, அது ஒன்றாக இணைந்து நன்றாக வேலை செய்யும். அற்புதமான இந்த புதிய ஃபிகோ ஆஸ்பியர் இந்தியாவை எப்படி இயக்குகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்."

ராஜ் சர்க்கார், போர்டு இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துணை தலைவர் கூறியதாவது: "இன்று இந்தியா பலருக்கு பல வழிகளில் ஆசைகளையும் இலட்சியங்களையும் இயக்குகிறது. நமது பிரச்சாரம் புதிய யோசனைகளால் நாம் வாழும் வழிகளில் மாற்றம் ஏற்படும் என்பதர்கான ஒரு கொண்டாட்டம். நம் வாழ்வில் மதிப்புகள் மற்றும் ஆசைகளை நோக்கி முன்னேறி செல்ல நம் ஓவ்வொருவருக்கும் உந்து கோலாக இருப்பது எது என்பதை கண்டறியவும் மற்றும் புதிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியரை ஊக்குவித்த பயணம் உள்ளிட்டவையையும் கண்டறியலாம்."

"போர்டு இந்தியாவில், நாங்கள் புதிதாக மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஒரு நிலையான மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் தேவையை வழங்க இயங்குகிறோம். இந்த பிரச்சாரத்தின் மூலம், நம்

ஃபிகோ ஆஸ்பியர் நவீன இந்தியாவின் ஆசைகளை எப்படி முன்னிலைப்படுத்துகிறது என்பதை சிறப்பம்சமாக காட்டுவோம். இந்த சேடான் ஒவ்வொரு வழியிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் வடிவமைக்கப்பட்டுள்ளது." சர்க்கார் கூறினார்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது போர்டு ஆஸ்பியர்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience