மஹிந்திரா எக்ஸ்‌யு‌வி300 மாதிரி உலகளாவிய என்‌சி‌ஏ‌பி மோதும் சோதனையில் இந்திய கார்களிலேயே அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது

published on ஜனவரி 24, 2020 01:45 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி300

  • 27 Views
  • ஒரு கருத்தை எழுதுக

குழந்தை பாதுகாப்பில் 4 புள்ளிகளை எடுத்த முதல் இந்திய வாகனம் இதுவே ஆகும்

Mahindra XUV300 Scores Highest Score For An Indian Car In Global NCAP Crash Tests

  • உலகளாவிய என்‌சி‌ஏ‌பி துவக்க நிலையிலுள்ள எக்ஸ்‌யு‌வி300 ஐ இதன் மோதும் சோதனைக்காகப் பயன்படுத்தியது. 

  • இதில் இரட்டை முன்புற காற்று பைகள், இ‌பி‌டி உடன் கூடிய ஏ‌பிஎஸ், மற்றும் ஐ‌சோஃபிக்ஸ் குழந்தை இருக்கை நிலைத்தாங்கிகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெறுகிறது.

  • இது பெரியோர் அமர்விற்கான முழுமையான 5-புள்ளிகளை எடுத்துள்ளது.

சமீபமாக உலகளாவிய என்‌சி‌ஏ‌பி ஆனது #இந்தியாவுக்கான பாதுகாப்பான கார்களின் ஒரு பகுதியாக இருக்கும் மஹிந்திரா எக்ஸ்‌யு‌வி300 மாதிரியை மோதும்-சோதனைக்கு உட்படுத்தியது. இதில் இந்த சப்-4எம் எஸ்‌யு‌வி பெரியோர் அமர்விற்கான பாதுகாப்பு மதிப்பாக 5-புள்ளிகளையும், குழந்தைகள் அமர்விற்கான மதிப்பாக 4 புள்ளிகளையும் எடுத்துள்ளது. 

சோதனை செய்யப்பட்ட வாகனம் எக்ஸ்‌யு‌வி300 மாதிரியின் துவக்க-நிலை வகையாகும், இது ஓட்டுநர் மற்றும் துணை-ஓட்டுநருக்கான காற்று பை, ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை நிலைதாங்கிகள், இ‌பி‌டி உடனான ஏ‌பி‌எஸ் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்பட்டது. மஹிந்திராவின் சப்-4எம் எஸ்‌யு‌வி மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (இ‌எஸ்‌சி) அமைப்பு மற்றும் குறிப்பிட்ட வகைகளில் 7 காற்றுப்பைகள் வரை வருகிறது. 

Mahindra XUV300 Scores Highest Score For An Indian Car In Global NCAP Crash Tests

நிபந்தனைகளின் படி, எக்ஸ்‌யு‌வி300 மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் மோதப்பட்டு சோதனை செய்யப்பட்டது, இதன் மையப்பகுதி தொகுப்பும், கால் வைக்கும் தளப்பகுதியும் நிலையாக இருந்தது. பெரியோர் அமர்வு பகுதியின் தலை மற்றும் கழுத்தின் பாதுகாப்பு மிகவும் நன்றாக இருந்தது. அதே போல், ஓட்டுநரின் மார்பளவு பகுதியின் பாதுகாப்பும் நன்றாக இருந்தது. பயணிகளின் மார்பளவு பகுதியின் பாதுகாப்பும் போதுமானதாக இருந்தது. நன்றாக இயங்கிய எஸ்‌யு‌வியின் மற்றொரு அம்சத்தில் தொடை மற்றும் கால்மூட்டுப் பகுதியின் பாதுகாப்பும் அடங்கியிருந்தது.

மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மஹிந்திரா எதை அறிமுகப்படுத்தும்? 

மஹிந்திராவானது அனைத்து வகைகளிலும் நிலையான ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை நிலைதாங்கிகளுடன் எக்ஸ்‌யு‌வி300 மாதிரியை அளிக்கிறது. 3-வயதுடைய குழந்தைக்கான குழந்தை கட்டுப்பாட்டு அமைப்பானது இருக்கையுடன் இணைக்கப்பட்ட சிறந்த பாதுகாப்பு அமைப்பின் முன்புறத்தை நோக்கி இருக்குமாறு நிறுவப்பட்டிருக்கும், இதன் மூலம் ஏதேனும் மோதல் ஏற்படும் போது குழந்தை முன்னோக்கி நகர்வது தடுக்கப்படுகிறது. இது குழந்தையின் மார்பு பகுதிக்கான சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. 18-மாத-குழந்தைக்கான சி‌ஆர்‌எஸ் ஆனது ஐசோஃபிக்ஸ் மற்றும் கால் மிதியடி உடன் பின்புறத்தை நோக்கி இருக்குமாறு நிறுவப்பட்டிருக்கும், அதோடு இது சிறந்த பாதுகாப்பையும் அளிக்கிறது. 

எக்ஸ்‌யு‌வி300 பயணிகளின் இருக்கையில் பின்புறத்தை நோக்கி இருக்கும் சி‌ஆர்‌எஸ்ஸை பயன்படுத்தும் தேவை ஏற்படும் போது பயணிகளின் காற்றுப்பை துண்டிக்கப்படுகின்ற சாத்தியக்கூறினை அளிக்கிறது. மூன்று-புள்ளியுடைய இருக்கை வார்ப்பட்டைகளின் பற்றாக்குறையினாலும், குறைவான ஐசோஃபிக்ஸ் குறிப்பிடுதலினாலும் குழந்தை அமர்விற்கான பாதுகாப்பு மதிப்பு நான்கு புள்ளிகளாக மதிப்பிடப்பட்டது. 

மேலும் படிக்க : மஹிந்திரா எக்ஸ்‌யு‌வி300 ஏ‌எம்‌டி 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மஹிந்திரா எக்ஸ்யூவி300

1 கருத்தை
1
b
bhanupratap ajeetvansh
Jan 22, 2020, 6:27:54 AM

It is a very good Compact SUV of this Segment...

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    explore மேலும் on மஹிந்திரா எக்ஸ்யூவி300

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trendingஎஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience