வோல்வோ போன்றே சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா மராசோ ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது
மஹிந்திரா மராஸ்ஸோ க்கு published on பிப்ரவரி 13, 2020 01:40 pm by dhruv.a
- 61 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்திரா மராசோ இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய கார்களில் விரைவில் காணக்கூடிய சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்ப சிறப்பம்சத்தின் முன் காட்சியை எங்களுக்கு வழங்குகிறது
காற்றுப்பைகள் போன்ற தற்போது செயலில் இருக்கின்ற பாதுகாப்பு தொழில்நுட்பம் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரதான கார்களை மட்டுமே அடைந்தது, மேலும் இயற்கையான ஒரு படி அதிகமாக, வருங்காலத்தில் வரக்கூடிய கார்களுக்குத் தவறான பாதையில் செல்லக்கூடிய ஓட்டுநரை எச்சரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சாலை விபத்தைத் தடுக்கக் கூடிய தொழில் நுட்பத்துடன் வருகிறது. இப்போது, மஹிந்திரா இந்த சிறப்பம்சங்களை ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் தனது மராசோ எம்பிவியில் முன் காட்சி செய்தது, இது ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் உள்ள மஹிந்திரா மராசோ காட்சிப்படுத்தப்பட்ட காரில் இது போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன:
-
ஓட்டுநர் சோர்வாக இருப்பதைக் கண்டறியும் அமைப்பு: திசைத்திருப்பியின் இயக்கங்களைக் கண்காணிப்பதன் வாயிலாக ஓட்டுநர் சோர்வாக இருப்பதைக் கண்டறிந்து ஓய்வெடுக்க அறிவுறுத்துகிறது.
-
வாகனத்திற்கு நேரவிருக்கும் விபத்தை எச்சரிக்கும் அமைப்பு: கேமராவின் மூலமாகக் காரை நெருங்கக்கூடிய தவறான வாகனம் அல்லது பொருள் போன்றவற்றை ஓட்டுநருக்கு எச்சரிக்கிறது.
-
ஓட்டுநரின் கவனத்தைக் கண்டறிதல்: கவனக்குறைவைக் கண்டறிந்து ஓட்டுநரை எச்சரிக்கிறது.
-
பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல்: இது ஒரு உணர்வி அடிப்படையிலான சாதனமாகும், இது ஓட்டுநருக்குப் புலப்படாத ஆனால் ஓட்டுநரின் பக்கத்திலும் பின்புறத்திலும் வரக்கூடிய வாகனங்களைக் கண்டறிய உதவும்.
-
தவறான பாதையில் செல்லக்கூடிய ஓட்டுநரை எச்சரிப்பதற்கான அமைப்பு: ஒரு ஓட்டுநர் கவனக்குறைவாகப் பாதையிலிருந்து வெளியே செல்வதைத் தடுக்க முன்பக்க கேமரா பயன்படுகிறது.
- அவசரக்கால தடுத்துநிறுத்தும் தானியங்கி அமைப்பு: இந்த ரேடார் அடிப்படையிலான அமைப்பு, தேவைப்படக்கூடிய நேரங்களில் தானாகவே தடைகருவிகளைப் பயன்படுத்துகிறது.
மஹிந்திரா மராசோ டிசம்பர் 2018 இல் பாதுகாப்பிற்கான நான்கு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. இதில் இரு முன்பாகக் காற்றுப்பைகள், ஏபிஎஸ் உடனான இபிடி, பின்புறம் வாகனத்தை நிறுத்த உதவும் உணர்விகள், ஐஎஸ்ஓ பிக்ஸ் நிலைத்தாங்கிகள், முன்பக்க இருக்கை பட்டிக்கான நினைவூட்டல் மற்றும் இயந்திர தடுத்து நிறுத்தும் அமைப்பு ஆகியவை உள்ளன. மஹிந்திரா இந்த சாலை விபத்தைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பதற்கு முன்னர், மாராசோ பக்கவாட்டு, திரை மற்றும் முழங்கால் காற்றுப்பைகள், சிறிய எக்ஸ்யூவி 300 இல் கூட கிடைக்கும் முன்பக்கம் வாகனத்தை நிறுத்த உதவக்கூடிய உணர்விகள் போன்ற மேம்பாடுகளைப் பெற விரும்புகிறோம்.
பிரதான கார்கள் தற்போது இருக்கின்ற பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் நன்கு பொருத்தப்பட்டவுடன், நாம் செயலில் உள்ளவற்றுக்குச் செல்ல வேண்டும். சந்தைப்படுத்துதல் மற்றும் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் சிறப்பாக இருந்தால்தான் இந்த தொழில்நுட்பங்கள் நிச்சயமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், நாட்டின் தற்போதைய சட்டம் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக பெரும்பாலான அதிக விலை கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கார்களில் இந்த சிறப்பம்சங்களை வழங்குவதைத் தவிர்க்கின்றன.
இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய மராசோ கார் வருமா என்பது குறித்து மஹிந்திரா எதுவும் கூறாமல் இருக்கின்றது. எவ்வாறாயினும், இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் இந்த சிறப்பம்சங்கள் அதிகமான மக்கள் பயன்படுத்தும் தினசரி வாகனமாகச் சந்தையில் நுழையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்க: மராசோ டீசல்
- Renew Mahindra Marazzo Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
0 out of 0 found this helpful