• English
  • Login / Register

2015 டோக்கியோ மோட்டார் ஷோ நேரடி: டாட்சன் கோ கிராஸ் தொழில்நுட்பம், சர்வதேச அரங்கேற்றம் பெற்றது

raunak ஆல் அக்டோபர் 29, 2015 07:26 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டோக்கியோ:

தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில், தனது முதல் கிராஸ்ஓவர் தொழில்நுட்பமான கோ கிராஸை, டாட்சன் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இது ஏற்கனவே ஜப்பானில் வெளியிடப்பட்ட நிலையில், மற்ற ஆசிய நாடுகளோடு சேர்த்து இந்தியாவிலும் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2014 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் சர்வதேச அரங்கேற்றத்தை பெற்ற ரெடிகோ தொழில்நுட்பத்தையும், இந்த புதிய மாடலோடு சேர்ந்து, டாட்சன் நிறுவனம் காட்சிக்கு வைத்தது. ரெனால்ட் க்விட்டின் அறிமுகத்தின் போது, ரெனால்ட்-நிசான் கூட்டணியின் CEO கார்லோஸ் கோஸ்ன் கூறுகையில், “அடுத்தாண்டு ரெடிகோ, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும், அதாவது 2016 ஆம் ஆண்டில்” என்றார். எனவே இதன் தயாரிப்பு பதிப்பை, அடுத்து வர உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

இயந்திரவியலை பொறுத்த வரை, ரெனால்ட் க்விட்டிற்கு ஆற்றலை அளிக்கும் 800 cc மோட்டாரை கொண்டே ரெடிகோ-வும் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்விட்டில் உள்ள இந்த மோட்டாரின் மூலம் வெளியீடாக 54 PS @ 5678 மற்றும் ஒரு அதிகபட்ச முடுக்குவிசையாக 72 Nm @ 4386 rpm பெறப்பட்டு, அதை ஒரு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. க்விட்டில் AMT டிரான்ஸ்மிஷனை ரெனால்ட் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது. எனவே ரெடிகோவிலும், அதே AMT டிரான்ஸ்மிஷன் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience