• English
  • Login / Register

நாவி மும்பையில் ரோட்டில் நடந்த மோதல்: டேப்பில் பதிவான காட்சிகள்.

manish ஆல் ஆகஸ்ட் 13, 2015 05:05 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: அதிகரித்து வரும் ரோட்டில் நடக்கும் மோதல்களில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் பெயர் சந்தோஷ் ஷிம்லிகர். பதிவான காட்சிகளில் ஒருவர் பரபரப்பான சாலையில்  வேகமாக ஓடிகொண்டிருக்கும் ஸ்விப்ட் காரின் பான்ட் மேல் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள தொற்றிக்கொண்டிருக்கும் அதிர்ச்சியான காட்சியை பார்க்க முடிந்தது.

இந்த சம்பவம் கார் டிரைவருக்கும் வோல்வோ பேருந்து டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் நிகழ்ந்தது. அந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. நாவி மும்பை பகுதியில் நடந்த இந்த மோதலில் கார் டிரைவர் பேட்டினால் தாக்கப்பட்டார். கார்  டிரைவரும்  பதிலுக்கு வோல்வோ பேருந்தின் கண்டாடிகளை அடித்து நொறுக்கினார். தாக்கிய நபர் தப்பி போகாமல் இருக்க மாருதி ச்விப்டின் பானட் மீது அந்த காரை நிறுத்துவதற்காக  சந்தோஷ் ஏறினார்.

அவர் எடுத்த  எந்த முயற்சியும் பலிக்கவில்லை. 300 மீட்டர் தூரம் விண்ட்ஸ்க்ரீன் வைப்பர் ஒன்றை பிடித்து தொங்கியவாறே சென்று பின் கீழே விழுந்தார்.

வீடியோ மூலம்!

மஞ்சள் நிற மழைகொட் அணிந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரதிநிதியும் அந்த  கரை நிறுத்த முயற்சி செய்து முடியாமல் உடனே தன் செல்போன் மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தரும் காட்சியையும் நாம் பார்க்க முடிகிறது.

27 ஆம் தேதி ஜூலை மாதம் நடந்த இந்த சம்பவத்தை பற்றி CCTV கமெராவில் பதிவான காட்சியின் உதவியுடன் விசாரணை நடத்தி அந்த டிரைவரின் பெயர் அப்துல் ரஷீத் அன்சாரி என்று கண்டுபிடித்து சம்பவதிற்கு பிறகு நான்கு நாட்களில் அந்த ஓட்டுனரை கைது செய்தனர். சந்தோஷ் ஷிம்லிகர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்குஇந்த சம்பவத்தால்  கால் மற்றும் தலையில் அடிபட்டு இருந்தது.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience