புதிய கார்களின் பாதுகாப்புதான் முக்கியம்… பிளாட்பெட் டிரக் டெலிவரி சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் டொயோட்டா

published on பிப்ரவரி 16, 2024 08:07 pm by shreyash

  • 52 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த முயற்சி மூலமாக புதிய கார்களை குடோன்களில் இருந்து விற்பனை நிலையங்களுக்கு சாலை வழியாக ஓட்டி வருவதை தவிர்க்க முடியும். இது வாகனங்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும்.

Toyota Flatbed Truck delivery service

ஒரு புதிய காரை வாங்கும்போது, ​​ஓடோமீட்டர் பூஜ்ஜியத்தில் அல்லது அதற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் பலருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் பெரும்பாலான கார்கள் டெலிவரிக்கு முன்னரே சில கி.மீ தூரம் ஓடியிருப்பதை பார்க்க முடியும். அதற்கான காரணம், டீலர்ஷிப் ஊழியர்கள் அவற்றை குடோனில் இருந்து ஷோரூமுக்கு ஓட்டி வந்திருப்பார்கள்.

டொயோட்டா -வின் இந்த புதிய முயற்சியானது - 'அற்புதமான புதிய கார் டெலிவரி தீர்வு' - வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய கார்களை ஓடோ மீட்டரில் மிக மிக குறைந்தபட்ச கிலோ மீட்டர் ரீடிங் உடன் டெலிவரிக்கு தயாராவதை உறுதி செய்யும். இந்த முயற்சியின் கீழ், புதிய வாகனங்கள் பிளாட்பெட் டிரக்குகள் மூலம் டொயோட்டாவின் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

Toyota Hyryder Interior

இந்த டெலிவரி முயற்சி வாகனங்களின் பாதுகாப்பான போக்குவரத்தையும் உறுதியளிக்கிறது. கூடுதலாக, இந்த வாகனங்கள் போக்குவரத்தின் போது ஏற்படும் சேதங்களுக்கு எதிராக காப்பீடு செய்யப்படும். இந்த புதிய டெலிவரி முறைக்காக வாடிக்கையாளருக்கு தனியாக கட்டணங்கள் எதுவும் வசூல் செய்யப்படாது என டொயோட்டா தெரிவித்துள்ளது, .

மேலும் பார்க்க: புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா ? உங்களிடம் உள்ள பழைய காரை ஸ்கிராப் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா ?

பெரிய டிரக்குகள் மூலம் போக்குவரத்து சவாலாக இருக்கும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் இந்த புதிய டெலிவரி சேவை நடைமுறைக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக, இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் உள்ள 130 டொயோட்டா டீலர்ஷிப்களில் இந்த டெலிவரி சர்வீஸ் முதலில் வழங்கப்படும்.

இந்த புதிய டெலிவரி முயற்சியைப் பற்றி டொயோட்டா தெரிவிக்கும் கூடுதல் விஷயங்கள் இங்கே:

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர் அனுபவத்தை இந்த துறையில் முதல் "அற்புதமான புதிய கார் டெலிவரி தீர்வு" மூலம் மாற்றியமைக்கவுள்ளது

'வாடிக்கையாளர்களின்-மையமாக இருக்கும் அணுகுமுறை' மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மூலம் ஒரு அற்புதமான வாங்கும் அனுபவத்தை கொடுக்கும் உறுதிப்பாட்டிற்கு இணங்க, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட். லிமிடெட் (டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்/டிகேஎம்) இன்று தனது "அற்புதமான புதிய கார் டெலிவரி சொல்யூஷன்" என்ற புதிய டெலிவரி முறையை அறிவித்தது, இது TKM -ன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களால் அவர்களின் விற்பனை செயல்முறையின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படும். புதிய முயற்சியானது, டீலர் ஊழியர்களால் டெலிவரி செய்யும் இடத்திற்கு புதிய கார்களை ஓட்டுவதைத் தவிர்த்து, டெலிவரி டச் பாயிண்ட் வரை நிறைவான சேவையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய முயற்சியானது டொயோட்டா டீலர்களுக்கு புதிய வாகனங்களை டீலர் ஸ்டாக்யார்டுகளில் இருந்து தங்களின் விற்பனை நிலையங்களுக்கு பிளாட்-பெட் டிரக்கில் கொண்டு செல்ல உதவும். லாஸ்ட் மைல் தளவாடங்கள் சவால்களை ஏற்படுத்தும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இடங்களில் கூட, புதிய வாகனங்களை சாலையில் ஓட்டாமல் டீலர்ஷிப்களின் இறுதி டெலிவரி அவுட்லெட்டுகளை சென்றடைவதை இது உறுதி செய்யும்.

இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், 26 மாநிலங்களில் இருந்து 130 டீலர்ஷிப்களை கொண்ட டொயோட்டா வாடிக்கையாளர்கள், டீலர்ஷிப்களில் இந்த நம்பகமான மற்றும் மகிழ்ச்சிகரமான கார் வாங்கும் அனுபவத்தை பெறுவார்கள். மேலும் இதில் கீழே உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் அடங்கும்:

    1. மன அமைதி மற்றும் அற்புதமான டெலிவரி அனுபவம் - அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டெலிவரி டச் பாயின்ட்டுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து சேவை

    2. வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக செலவுகள் ஏதுமில்லை

    3. புதிய தொழில் அளவுகோலை நிர்ணயித்தல் - நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நிலையான, ஸ்டாண்டர்டான மற்றும் நம்பகமான வாங்கும் அனுபவம்

    4. அதிக வசதி மற்றும் கவனிப்பு - பாதுகாப்பான போக்குவரத்துக்கான பிளாட்பெட் கேரியர்கள், டிரான்ஸிட் இன்சூரன்ஸ் மூலம் பாதுகாப்பாக இருக்கும்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் சேல்ஸ்-சர்வீஸ்-யூஸ்டு கார் வர்த்தகத்தின் துணைத் தலைவர் திரு. சபரி மனோகர் பேசுகையில், "டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரில், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எங்கள் அர்ப்பணிப்பு மிக முக்கியமானது. நாங்கள் தொடர்ந்து இந்த துறையில் புதுமைகளை உருவாக்க முயற்சித்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் அற்புதமான அனுபவத்தை பெறுவதற்காக இறுதி முதல் இறுதி வரையிலான இந்த முயற்சி எங்கள் டீலர்களால் செயல்படுத்தப்படும் "அற்புதமான புதிய கார் டெலிவரி தீர்வு" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்த துறையில் சிறந்து விளங்குவதற்கான எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. கேரியர் சேவை மூலம் ஷோரூம்கள், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதுமின்றி, மன அமைதியைத் தருவதோடு மட்டுமல்லாமல், போக்குவரத்து தொடர்பான சிக்கல்களைத் பெரும்பாலும் குறைப்பதன் மூலம் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான வாங்கும் அனுபவத்தை பெற உதவும். எங்கள் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு, இந்த முயற்சி குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயமாக பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அங்கு பெரிய டிரக்குகளின் போக்குவரத்து ஒரு சவாலாக உள்ளது மற்றும் புதிய வாகனங்கள் பெரும்பாலும் டீலர் குடோனில் இருந்து சாலை வழியாக டெலிவரி இடத்திற்கு டிரைவிங் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

இது ஒரு கார் டெலிவரி திட்டத்தை என்பதை விடவும், "அற்புதமான புதிய கார் டெலிவரி தீர்வு" என்ற புதிய முயற்சியை போல பல்வேறு  க்யூரேட்டட் தீர்வுகளை கொண்டு வருவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்

மேலும் பார்க்க: அப்டேட்: Toyota நிறுவனம் டீசல் பவர்டு கார்களை மீண்டும் விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது

திட்டத்தின் ஒரு பகுதியாக, தடையற்ற "அற்புதமான புதிய கார் டெலிவரி தீர்வு" செயல்படுத்த, டீலர்ஷிப்கள் இதற்கென நிபுணத்துவம் பெற்ற லாஜிஸ்டிக் நிறுவனத்துடன் இணைந்துள்ளன. இந்த புதுமையான அணுகுமுறை பிளாட்பெட் ஒற்றை கார் கேரியர்களை பயன்படுத்துவதை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இது புதிய வாகனங்களின் சாலையில் ஓட்டிவரும் போது எதிர்கொள்ளும் தொடர்புடைய அபாயங்களை திறம்பட குறைக்கிறது மற்றும் வாகன போக்குவரத்து செயல்முறையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உயர்த்துகிறது. மேலும், போக்குவரத்தின் போது வாகனங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த, போக்குவரத்து காப்பீடு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த கூடுதலான கவரேஜ், மேம்பட்ட எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனங்களை வழங்குவதில் மிகுந்த அர்ப்பணிப்பை கொண்ட டொயோட்டோவின் எண்ணத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக, TKM ஆனது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 5-ஆண்டுகளுக்கான இலவச ரோடு சைடு அசிஸ்ட் மற்றும் சிறப்புத் திட்டங்களை உள்ளடக்கிய மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மூலம் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம் முழு கொள்முதல் மற்றும் நீண்ட காலத்துக்கு வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்த முயற்சிக்கிறது. டொயோட்டா வாகனத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கனவு நனவாகும், எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான உரிமை அனுபவத்தை உறுதி செய்கிறது. “ என டொயோடோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience