இந்தியாவில் வேகமெடுக்கும் Tesla-வின் பயணம்: புதிய EV கொள்கையானது விரைவான அறிமுகம் மற்றும் குறைந்த இறக்குமதி கட்டணங்களுக்கு உதவுகின்றது

published on மார்ச் 18, 2024 07:55 pm by ansh

  • 14 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இருப்பினும் டெஸ்லா போன்ற உலகளாவிய EV உற்பத்தியாளர்களுக்கு இந்தக் கொள்கையின் மூலமாக பலன்களைப் பெற ஒரு விதிமுறை உள்ளது.

New E-Vehicles Policy Approved By The Government

உலகளவில் மிகப்பெரிய EV உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கான முயற்சியில் இந்திய அரசாங்கம் புதிய எலக்ட்ரிக் வாகனக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது உலகளாவிய EV உற்பத்தியாளர்கள் அதிக இறக்குமதி வரிகள் காரணமாக இந்திய சந்தையில் நுழையத் தயங்குகிறார்கள். இது அவர்களின் தயாரிப்புகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. இந்தக் கொள்கையின் கீழ் இந்நிறுவனங்கள் தங்கள் EV-களை இந்தியாவில் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட (CBU) யூனிட்களாக இறக்குமதி செய்யும் வாய்ப்பைப் பெறும். இருப்பினும் இந்தச் சலுகை குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது.

என்னென்ன நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்?

இந்த உலகளாவிய பிராண்டுகளுக்கு இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் போன்ற அளவுருக்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

  •  உலகளாவிய EV உற்பத்தியாளர்கள் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவ வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ரூ 4150 கோடியை (சுமார் 500 மில்லியன் டாலர்கள்) முதலீடு செய்ய வேண்டும்.

  •  உற்பத்தியாளர்கள் 3-ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத உள்ளூர்மயமாக்கலையும் 5-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத உள்ளூர்மயமாக்கலையும் உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக அவர்கள் முதல் 3 ஆண்டுகளுக்குள் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் வணிக உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

  • இறக்குமதி செய்யப்பட்ட EV-யின் குறைந்தபட்ச  செலவு + காப்பீடு + சரக்கு கட்டண (CIF) மதிப்பு தோராயமாக ரூ. 28.99 லட்சம் (USD 35000) இருக்க வேண்டும்.

  • இந்த பலன்களின் கீழ் EV உற்பத்தியாளர்கள் வருடத்திற்கு அதிகபட்சமாக 8000 யூனிட் EV -களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அதுமட்டும் இல்லாமல் நிறுவனம் முதலீடுட்டுக்கு வங்கியால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். மேலும் நிறுவனம் குறிப்பிட்ட காலக்கெடுவைக் கடைப்பிடிக்கத் தவறினால் அது அந்த உத்தரவாதத்தை இழக்கும்.

அதன் பலன்கள் என்ன?

Tesla Model 3

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் (MHI) அனுமதி பெற்று வங்கி உத்தரவாதத்தின் அடிப்படையில் முதலீடு செய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மற்ற அளவுகோல்களை பூர்த்தி செய்ய உறுதியளித்தால் அதன் EV-களை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய தகுதி பெறும். இறக்குமதி வரி விகிதம் வெறும் 15 சதவீதம் மட்டுமே. குறிப்புக்காக CBU-களுக்கான நிலையான இறக்குமதி வரியானது 100 சதவிகிதம் ஆக உள்ளது. இதன் காரணமாகவே நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளை போதுமான எண்ணிக்கையில் விற்பனை செய்வதற்கு போராடுகின்றன.

டெஸ்லா மற்றும் பிற பிராண்டுகளின் வருகை

Tesla

டெஸ்லா நீண்ட காலமாகவே இந்திய சந்தையில் நுழைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் EV-களுக்கான குறைந்த இறக்குமதி கட்டணங்களுக்கு தொடர்ந்து போராடுகிறது. டெஸ்லா மாடல் 3 மற்றும் டெஸ்லா மாடல் Y போன்ற பிரபலமான எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு இந்த வரிகள் குறிப்பிடத்தக்க தடைகள் என அமெரிக்க கார் தயாரிப்பாளர் அடிக்கடி மேற்கோள் காட்டினார். தற்போது இந்த எலக்ட்ரிக் வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் டெஸ்லா குறிப்பிட்ட அளவுகோல்களை வெற்றிகரமாகச் சந்தித்தால் அதன் இந்தியத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

மேலும் படிக்க: கூடுதல் பெயர்களுக்கான வர்த்தக முத்திரைகளை மஹிந்திரா பதிவு செய்கிறது

இந்தக் கொள்கையிலிருந்து பயனடையக்கூடிய மற்றொரு EV தயாரிப்பாளரான வின்பாஸ்ட் இந்திய சந்தையில் நுழைய ஆர்வமாக உள்ளது. வியட்நாமிய பிராண்ட் ஏற்கனவே நாட்டில் உள்ளூர் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுவும் செயல்பாட்டில் இருப்பதால் அது கூடுதல் பலன்களை பெறும்.

புதிய கொள்கையின் நீண்ட கால பலன்கள்

VinFast VF7

இந்தக் கொள்கையானது உண்மையில் உலகளாவிய பிராண்டுகளை தங்கள் EV-களை குறுகிய காலத்திற்குள் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த ஊக்குவிக்கிறது என்றாலும் அதன் பலன்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அப்பாலும் கிடைக்கும் வகையில் உள்ளன. இந்தக் கொள்கையின் பலன்களைப் பெற இந்த நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை நிறுவ வேண்டும் என்று கோருவதன் மூலம் நாட்டிற்குள் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இந்திய அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூடுதலாக பலன்களைப் பெறுவதற்கு இந்நிறுவனங்கள் 50 சதவீத உள்ளூர்மயமாக்கலை அடைய வேண்டும் என்பதால் இந்தக் கொள்கை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களை வழங்கும் இந்திய நிறுவனங்களின் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இது நாட்டிற்குள் அத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Tesla Model Y

மக்களைப் பொறுத்தவரை இந்த கொள்கையானது உலகம் முழுவதிலும் உள்ள அதிநவீன வாகன தொழில்நுட்பங்களுக்கு அதிகப்படியான அணுகலை வழங்குகின்றது. ஏனெனில் குறைக்கப்பட்ட இறக்குமதி கட்டணங்கள் மற்றும் அதிகரித்த உள்ளூர்மயமாக்கல் காரணமாக EV -கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக EV வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கத்தின் முக்கியத்துவம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தணித்து பசுமையான நிலையான எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: Tata Nexon EV ஃபேஸ்லிஃப்ட் லாங் ரேஞ்ச் Vs Tata Nexon EV (பழையது): செயல்திறன் ஒப்பீடு

இந்தக் கொள்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் எந்த உலகளாவிய எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் பார்க்க விரும்புகிறீர்கள்? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

1 கருத்தை
1
M
manoj jangid
Mar 15, 2024, 7:18:09 PM

Sir kya byd or mg brand ko bhi ye benefits mileage....it's mean byd seal price reduced at 15 to 20 lakhs

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience